திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 697 பேர் பாதிப்பு


திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 697 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 28 Jan 2022 4:13 PM GMT (Updated: 28 Jan 2022 4:13 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று 697 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரத்து 942 பேராக அதிகரித்துள்ளது. அவர்களில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 277 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஆஸ்பத்திரியில் 6,762 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்றால் 2 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 1,903 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story