காங்கிரஸ் கொள்கைகள் சரி என்பதை ஆர்எஸ்எஸ்க்கு பிரணாப் தெரிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது: ப சிதம்பரம்


காங்கிரஸ் கொள்கைகள் சரி என்பதை ஆர்எஸ்எஸ்க்கு பிரணாப் தெரிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது: ப சிதம்பரம்
x
தினத்தந்தி 8 Jun 2018 3:17 AM GMT (Updated: 8 Jun 2018 3:17 AM GMT)

காங்கிரஸ் கொள்கைகள் சரி என்பதை ஆர்எஸ்எஸ்க்கு பிரணாப் தெரிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது என்று ப சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

மராட்டிய மாநிலம், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தலைமை விருந்தினராக கலந்துகொண்டு பேசப்போகிறார் என தகவல்கள் வெளியானபோது, அது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ஆட்சேபம் தெரிவித்தனர். ஆனால், எதிர்ப்புகளை மீறி பிரணாப் முகர்ஜி, நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டு பேசினார். 

அப்போது, சகிப்புத்தன்மை இல்லை என்றால் இந்தியா சீர்குலைந்துவிடும் எனவும், மத ரீதியாகவோ, சித்தாந்த ரீதியாகவோ இந்தியாவை அடையாளப்படுத்த முயன்றாலும், சகிப்புத்தன்மை இல்லை என்றாலும் அது நாட்டுக்கு சீர்குலைவை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் எனவும் தெரிவித்தார்.  பிரணாப் முகர்ஜியின் உரைக்கு பிறகு, தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட காங்கிரஸ் அவரது கருத்தை வரவேற்கும் வகையில் கருத்து தெரிவித்தது. 

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப சிதம்பரம் தனது டுவிட்டரில், பிரணாப் முகர்ஜியின் கருத்துக்கள் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்து உள்ளார். இது குறித்து, ப சிதம்பரம் கூறியிருப்பதாவது:- “  ஆர்எஸ்எஸ் கொள்கை தவறு என்பதை பிரணாப் வெளிப்படுத்தியுள்ளார். காங்கிரஸ் கொள்கைகள் சரி என்பதை ஆர்எஸ்எஸ்க்கு பிரணாப் தெரிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது. காங்கிரஸ் கொள்கைகள் சரி என்று கூறியதன் மூலம் ஆர்எஸ்எஸ் கொள்கை தவறு என பிரணாப் முகர்ஜி விமர்சித்துள்ளார்” இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார். 


Next Story