இந்தியாவுக்கு எதிராக ஈரான் மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுக்காது: இந்திய முன்னாள் தூதரக அதிகாரி


இந்தியாவுக்கு எதிராக ஈரான் மூர்க்கத்தனமான  நிலைப்பாட்டை எடுக்காது: இந்திய முன்னாள் தூதரக அதிகாரி
x
தினத்தந்தி 11 July 2018 1:46 PM GMT (Updated: 11 July 2018 1:46 PM GMT)

இந்தியாவுக்கு எதிராக ஈரான் மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுக்காது இந்திய முன்னாள் தூதரக அதிகாரி தெரிவித்து உள்ளார். #Iran

ஐதராபாத்,

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணைய் கொள்முதல் செய்வதை  இந்தியா நிறுத்தினால், இந்தியாவுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என்று ஈரானின் மூத்த தூதரக அதிகாரி தெரிவித்து இருந்த நிலையில், இந்தியாவுக்கு எதிராக ஈரான் அத்தகைய நடவடிக்கையை எடுக்க வாய்ப்பு இல்லை என்று வளைகுடா நாடுகளுக்கான முன்னாள் இந்திய தூதர் தெரிவித்துள்ளார். 

ஐதாரபாத்தில் பிடிஐ செய்தி நிறுவனம் தொடர்பு கொண்ட போது, இது பற்றி சவூதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வளைகுடா நாடுகளுக்கான இந்திய முன்னாள் தூதரக அதிகாரி, தல்மிஸ் அகமது கூறியதாவது, “ நான் இதை தீவிரமாக எடுத்துக்கொள்ள மாட்டேன். தூதரக அதிகாரி எடுக்கும் முடிவு இல்லை இவை.  அதிமுக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள், உயர் மட்ட குழுவினரால் மட்டுமே எடுக்கப்படும்

நாடுகளுக்கு இடையிலான நட்புறவுகள் அனைத்துமே இருதரப்பு ஆதாயங்களுக்காகவும், செய்துகொள்ளும் ஒப்பந்தங்களும் பரஸ்பர ஆதாயம் கருதியே செய்யப்படுகின்றன. இந்நிலையில், பொறுப்புள்ள ஒரு நாட்டின் தூதர், பொறுப்பற்ற முறையில் இப்படி கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். இந்தியாவுக்கு எதிராக ஆக்ரோஷமான அணுகுமுறையுடன் ஈரான் நடந்து கொள்ளாது” என்றார். 

முன்னதாக, டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஈரான் நாட்டு துணை தூதர் மசூத் ரிஸ்வானியன் ராஹாகி, ‘ஈரானை ஒதுக்கிவிட்டு சவுதி, ரஷியா, ஈராக் போன்ற நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய இந்தியா முடிவு செய்தால், இந்தியாவுக்கு அளித்துவரும் முன்னுரிமையை நிறுத்தி விடுவோம்’ என குறிப்பிட்டிருந்தார்.


Next Story