காஷ்மீரில் துப்பாக்கி சண்டை 4 பயங்கரவாதிகள் உயிரிழப்பு


காஷ்மீரில் துப்பாக்கி சண்டை 4 பயங்கரவாதிகள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 8 Aug 2018 3:30 PM GMT (Updated: 8 Aug 2018 3:30 PM GMT)

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.


ஸ்ரீநகர், 


காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் ரபியாபாத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்திய பாதுகாப்பு படை, காஷ்மீர் சிறப்பு அதிரடிப்படை ஆகியவற்றை சேர்ந்த வீரர்கள் கூட்டாக அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களை பார்த்ததும், மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பாதுகாப்பு படையினரும் அதை எதிர்கொண்டு பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கு இடையே நடந்த பயங்கர சண்டையின் முடிவில், 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒரு ராணுவ வீரர் காயம் அடைந்தார். இதனையடுத்து அப்பகுதி பாதுகாப்பு வளைத்திற்கு கீழ் கொண்டுவரப்பட்டது.

Next Story