இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்


இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்
x
தினத்தந்தி 14 Aug 2018 3:56 AM GMT (Updated: 14 Aug 2018 3:56 AM GMT)

இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவியதாக தகவல்கள் கூறுகின்றன. #Ladakh

லடாக்,

இந்தியா, பூடான், சீனா ஆகிய 3 நாடுகள் சந்திக்கும் இடத்தில் டோக்லாம் பகுதி அமைந்துள்ளது. இதற்கு 3 நாடுகளும் உரிமை கோரி வருவதால் பிரச்சினைக்குரிய பகுதியாக இருந்து வருகிறது. சீனா கடந்த ஆண்டு இந்த பகுதியை நோக்கி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது. அப்போது இந்திய ராணுவம் அதை தடுத்து நிறுத்தியது. இந்தியா-சீன தலைவர்கள் சந்தித்து பேசியபின்பு இப்பிரச்சினை முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் சீனா மீண்டும் இந்திய எல்லைப்பகுதிக்குள் ஊடுருவியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள டெம்சாக் செக்டாரில் சுமார் 300-400 மீட்டர் தொலைவுக்கு ஊடுருவிய சீன ராணுவம், 5 கொட்டகைகளை அமைத்துள்ளது.

அதன்பின்னர் பிரிகேடியர் அளவிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து 3 கொட்டகைகளை சீன ராணுவம் அகற்றி உள்ளதாகவும், மீதமுள்ள இரண்டு கொட்டகைகள் சீன வீரர்கள் இன்னும் தங்கியிருப்பதாகவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இச்சம்பவம் பற்றி கருத்து கூற ராணுவம் மறுத்து விட்டது.  இதேபோல் கடந்த ஜூலை மாதமும் இந்திய பகுதிக்குள்  சீன ராணுவம் ஊடுருவியதாகவும், பின்னர் இந்திய வீரர்கள் தொடர்ந்து கொடி அணிவகுப்பு  நடத்தியதையடுத்து சீன வீரர்கள் திரும்பி சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

Next Story