காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், ராஜ்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்குள்ள ஒரு பகுதி ஒன்றில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.
இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள், துப்பாக்கிகள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story