டெல்லி: புத்தாண்டு கொண்டாட்டத்தில் சிறுவன் குண்டு பாய்ந்து பலி


டெல்லி: புத்தாண்டு கொண்டாட்டத்தில் சிறுவன் குண்டு பாய்ந்து பலி
x
தினத்தந்தி 1 Jan 2019 6:20 PM GMT (Updated: 1 Jan 2019 6:20 PM GMT)

டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சிறுவன் குண்டு பாய்ந்து பலியான சம்பவத்தில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள உஸ்மன்பூரில் நேற்று நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. அப்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இந்த நேரத்தில் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் 8 வயது சிறுவன் படுகாயத்துடன் கிடந்தான்.

உடனே சிறுவனை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவன் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டானா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின்னர் தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதேபோல் டெல்லியில் உள்ள வெல்கம் பகுதியிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் 12 வயது சிறுவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மர்ம நபர் 12 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Next Story