அரியானாவில் சோனியா காந்தியின் தேர்தல் பிரசாரம் ரத்து


அரியானாவில் சோனியா காந்தியின் தேர்தல் பிரசாரம் ரத்து
x
தினத்தந்தி 18 Oct 2019 4:58 AM GMT (Updated: 18 Oct 2019 4:58 AM GMT)

அரியானாவில் சோனியா காந்தியின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சண்டிகார், 

அரியானா மாநிலத்தில் வரும் 21 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால்,  அங்கு அனல் பறக்கும் பிரசாரத்தில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி இன்று மகேந்திரகர் நகரில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சோனியா காந்தி இடைக்கால தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்பு கலந்து கொள்ளும் முதல் பிரசார பொதுக்கூட்டம் என்பதால், முழு வீச்சில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்த நிலையில், சோனியா காந்தியின் தேர்தல் பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. சோனியா காந்திக்கு பதிலாக அவரது மகனும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி இக்கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story