ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து 8 பெட்டிகள் கழன்று ஓடின
ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து 8 பெட்டிகள் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்துக்கு விசாகா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் பாலுகோன் ரெயில் நிலையம் அருகே வந்தபோது திடீரென இணைப்பு துண்டிக்கப்பட்டு ரெயிலில் இருந்து 8 பெட்டிகள் கழன்று ஓடின. இதுபற்றி அறிந்ததும் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். இதனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் அந்த பெட்டிகள் ரெயிலில் இணைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சில மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்துக்கு விசாகா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் பாலுகோன் ரெயில் நிலையம் அருகே வந்தபோது திடீரென இணைப்பு துண்டிக்கப்பட்டு ரெயிலில் இருந்து 8 பெட்டிகள் கழன்று ஓடின. இதுபற்றி அறிந்ததும் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். இதனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் அந்த பெட்டிகள் ரெயிலில் இணைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சில மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story