மேற்கு வங்காளத்தில் புயல் பாதிப்பை பார்வையிட சென்ற மேலும் ஒரு மத்திய மந்திரிக்கு எதிர்ப்பு


மேற்கு வங்காளத்தில் புயல் பாதிப்பை பார்வையிட சென்ற மேலும் ஒரு மத்திய மந்திரிக்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 15 Nov 2019 8:28 PM GMT (Updated: 15 Nov 2019 8:28 PM GMT)

மேற்கு வங்காளத்தில் புயல் பாதிப்பை பார்வையிட சென்ற மேலும் ஒரு மத்திய மந்திரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலத்தில் ‘புல்புல்’ புயல் தாக்குதலால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் பாதிப்புக்கு மத்திய அரசு நிவாரண நிதி அளிக்கவில்லை என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி இருந்தார். இதனால் மத்திய மந்திரிகள் மீது அவருடைய கட்சியினர் ஆத்திரத்தில் உள்ளனர்.

கடந்த 13-ந் தேதி, புயல் பாதித்த தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்துக்கு சென்ற மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணை மந்திரி தேவஸ்ரீ சவுத்ரி, அதே மாவட்டத்துக்கு சென்றார். கொசபா என்ற இடத்தை அடைந்தபோது அவரது காரை திரிணாமுல் காங்கிரசார் தடுத்து நிறுத்தினர். ‘திரும்பிப் போ’ என்று கோஷமிட்டனர். பின்னர், போலீசார் தலையிட்டு அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

Next Story