6 வாகனங்களை நக்சலைட்டுகள் எரித்தனர்
சத்தீஷ்கார் மாநிலத்தில் 6 வாகனங்களை நக்சலைட்டுகள் எரித்தனர்.
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். திமடல்வாடா கிராமம் அருகே கவாசி சிங்கா (வயது 40), பொடியம் ஆய்தா (42), மட்கம் சோம்டா (22) ஆகிய 3 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள். சுக்மா நகரில், பொடியம் சோம்டி (24), மட்வி முகே (27) ஆகிய 2 பெண் நக்சலைட்டுகள், போலீஸ் அதிகாரிகள் முன்பு சரண் அடைந்தனர்.
இதற்கிடையே, நாராயண்பூர் மாவட்டத்தில் மடோனார் கிராமத்தில் சாலை போடும் இடத்துக்கு சென்ற நக்சலைட்டுகள், அங்கிருந்த 4 டிராக்டர்கள், ஒரு பொக்லைன் எந்திரம், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்தினர்.
சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். திமடல்வாடா கிராமம் அருகே கவாசி சிங்கா (வயது 40), பொடியம் ஆய்தா (42), மட்கம் சோம்டா (22) ஆகிய 3 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள். சுக்மா நகரில், பொடியம் சோம்டி (24), மட்வி முகே (27) ஆகிய 2 பெண் நக்சலைட்டுகள், போலீஸ் அதிகாரிகள் முன்பு சரண் அடைந்தனர்.
இதற்கிடையே, நாராயண்பூர் மாவட்டத்தில் மடோனார் கிராமத்தில் சாலை போடும் இடத்துக்கு சென்ற நக்சலைட்டுகள், அங்கிருந்த 4 டிராக்டர்கள், ஒரு பொக்லைன் எந்திரம், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்தினர்.
Related Tags :
Next Story