பீகாரில் சட்டசபைக்கு வெங்காய மாலை அணிந்து வந்த எம்.எல்.ஏ.
பீகாரில் சட்டசபைக்கு எம்.எல்.ஏ. ஒருவர் வெங்காய மாலை அணிந்து வந்தார்.
பாட்னா,
பீகாரில் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விலை உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டி பேசுவதற்காக எதிர்க்கட்சியான ராஷ்டிரீய ஜனதாதளம் எம்.எல்.ஏ. சிவ்சந்திர ராம் நேற்று சட்டசபை வளாகத்துக்கு வெங்காய மாலை அணிந்து வந்தார். சட்டசபைக்கு செல்லும் முன்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காய்கறிகள் விலை உயர்ந்துவருவதால் மக்கள் தங்கள் அன்றாட உணவை இழந்துவிட்டனர். வெங்காயம் வழக்கமாக கிலோ ரூ.50-க்குள் இருக்கும். ஆனால் இப்போது ஒரு கிலோ ரூ.80 வரை விற்கிறது. உண்மையை சொல்லப்போனால் நான் இந்த வெங்காயத்தை (மாலையை காட்டி) கிலோ ரூ.100 என்ற விலையில் வாங்கினேன். முதல்-மந்திரி நிதிஷ்குமார் நியாய விலையில் காய்கறி வழங்கும் கடைகள் திறக்கப்படும் என்ற வெற்று அறிவிப்பை வெளியிட்டார். நான் இதுவரை ஒரு கடையை கூட பார்க்கவில்லை. வெங்காயம் கிலோ ரூ.10-க்கு வழங்க முதல்-மந்திரி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பீகாரில் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விலை உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டி பேசுவதற்காக எதிர்க்கட்சியான ராஷ்டிரீய ஜனதாதளம் எம்.எல்.ஏ. சிவ்சந்திர ராம் நேற்று சட்டசபை வளாகத்துக்கு வெங்காய மாலை அணிந்து வந்தார். சட்டசபைக்கு செல்லும் முன்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காய்கறிகள் விலை உயர்ந்துவருவதால் மக்கள் தங்கள் அன்றாட உணவை இழந்துவிட்டனர். வெங்காயம் வழக்கமாக கிலோ ரூ.50-க்குள் இருக்கும். ஆனால் இப்போது ஒரு கிலோ ரூ.80 வரை விற்கிறது. உண்மையை சொல்லப்போனால் நான் இந்த வெங்காயத்தை (மாலையை காட்டி) கிலோ ரூ.100 என்ற விலையில் வாங்கினேன். முதல்-மந்திரி நிதிஷ்குமார் நியாய விலையில் காய்கறி வழங்கும் கடைகள் திறக்கப்படும் என்ற வெற்று அறிவிப்பை வெளியிட்டார். நான் இதுவரை ஒரு கடையை கூட பார்க்கவில்லை. வெங்காயம் கிலோ ரூ.10-க்கு வழங்க முதல்-மந்திரி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story