ஆந்திராவில் இன்று 5,145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத்,
ஆந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு இன்று புதிதாக 5,145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,44,864 ஆக அதிகரித்துள்ளது.
அங்கு கொரோனா பாதிப்பால் இன்று 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஆந்திராவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6,159 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் இதுவரை மொத்தம் 6,91,040 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது 47,665 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவில் வருகிற மே மாதத்துக்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் தகுதியுடைய அனைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யப்படும் என ஜனாதிபதி ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.