வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: பதவியேற்பு விழாவில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியிடம் ஆளுநர் கோரிக்கை


வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: பதவியேற்பு விழாவில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியிடம் ஆளுநர் கோரிக்கை
x
தினத்தந்தி 5 May 2021 6:22 AM GMT (Updated: 5 May 2021 6:22 AM GMT)

வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பதவியேற்பு விழாவில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியிடம் ஆளுநர் ஜெகதீப் தங்கர் கோரிக்கை வைத்தார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வின் கடும் சவாலை எதிர்கொண்டு, மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி. 

66 வயதாகும் மம்தா, காலில் காயமடைந்த நிலையிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தேர்தல் களத்தில் சுழன்று, வரலாற்று வெற்றியை பெற்றுள்ளார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் கட்சியின் சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மம்தா, தொடர்ந்து 3-வது முறையாக முதல்-மந்திரியாக இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். 

கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக பதவியேற்றார். மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் ஜெகதீப் தங்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதில் சிறப்பு விருந்தினராக சவுரவ் கங்குலி பங்கேற்றார்.

இந்நிலையில் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பதவியேற்பு விழாவில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியிடம் ஆளுநர் ஜெகதீப் தங்கர் கோரிக்கை வைத்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள மம்தா ஜி-யை வாழ்த்துகிறேன். சமுதாயத்தை பெருமளவில் பாதித்த இந்த விவேகமற்ற வன்முறைக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எங்கள் முன்னுரிமை. அவசர சட்டத்தின் அடிப்படையில் ஆட்சியை மீட்டெடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் முதல்மந்திரி எடுப்பார் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்.

Next Story