ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,032 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்


ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,032 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
x
தினத்தந்தி 10 Jun 2021 7:34 AM GMT (Updated: 10 Jun 2021 7:34 AM GMT)

ஒடிசா மாநிலத்தில் தற்போது 69,333 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவனேஸ்வர்,

இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை தினமும் படிப்படியாக குறைகிறது. இன்று ஒடிசா மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு புதிதாக 6,097 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒடிசாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,37,226 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 44 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், ஒடிசாவில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,167 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 8,032 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,64,673 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 69,333 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Next Story