மேற்குவங்காளத்தில் மேலும் 601 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


மேற்குவங்காளத்தில் மேலும் 601 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 5 Oct 2021 2:32 AM GMT (Updated: 5 Oct 2021 2:32 AM GMT)

மேற்குவங்காளத்தில் மேலும் 601 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, மாநிலத்தில் மேலும் 601 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மேற்குவங்காளத்தில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 71 ஆயிரத்து 841 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிப்பில் இருந்து மேலும் 572 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மேற்குவங்காளத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 45 ஆயிரத்து 400 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பரவியவர்களில் 7 ஆயிரத்து 604 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மேற்குவங்காளத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்து 837 ஆக அதிகரித்துள்ளது.

Next Story