நாடு முழுவதும் ஒரே நாளில் 573 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


நாடு முழுவதும் ஒரே நாளில் 573 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 2 Jan 2024 2:50 PM GMT (Updated: 2 Jan 2024 2:56 PM GMT)

கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

புதுடெல்லி,

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அத்துடன் ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் அரியானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 2 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் தற்போது 4,565 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 263 பேருக்கு ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story