கட்சி தலைவராக ராகுல்காந்தியை நியமிக்கக்கோரி சத்தீஷ்கர் காங்கிரஸ் தீர்மானம்


கட்சி தலைவராக ராகுல்காந்தியை நியமிக்கக்கோரி சத்தீஷ்கர் காங்கிரஸ் தீர்மானம்
x

கட்சி தலைவராக ராகுல்காந்தியை நியமிக்கக்கோரி சத்தீஷ்கர் காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ராய்ப்பூர்,

காங்கிரஸ் தலைவர் தேர்தல், அடுத்த மாதம் 17-ந் தேதி நடக்கிறது. வேட்பு மனு தாக்கல், வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது. தலைவர் பொறுப்பை ராகுல்காந்தி ஏற்கக்கோரி, காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

இந்தநிலையில், காங்கிரஸ் ஆளும் மற்றொரு மாநிலமான சத்தீஷ்கரில், தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் 310 மாநில காங்கிரஸ் பிரதிநிதிகளின் கூட்டம் நடந்தது. அதில், ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைவராக நியமிக்கக்கோரும் தீர்மானத்தை முதல்-மந்திரி பூபேஷ் பாகல் முன்மொழிந்தார். மாநில காங்கிரஸ் தலைவர் மோகன் மார்கம் உள்ளிட்டோர் வழிெமாழிந்தனர். அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுபோல், ஒவ்வொரு மாநில காங்கிரசும் தீர்மானம் நிறைவேற்றினால், ராகுல்காந்தி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளது என்று பூபேஷ் பாகல் கூறினார்.


Next Story