'மனதின் குரல்' நிகழ்ச்சியின் 100-வது தொகுப்பை கேட்க தயாராக இருங்கள் - பிரதமர் மோடி டுவீட்


மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது தொகுப்பை கேட்க தயாராக இருங்கள் - பிரதமர் மோடி டுவீட்
x

பிரதமர் மோடியின் 100-வது 'மனதின் குரல்' நிகழ்ச்சி ஐ.நா. தலைமையகத்தில் ஒலிபரப்பப்பட உள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 'மனதின் குரல்' என்ற பெயரில் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் 100-வது 'மனதின் குரல்' நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. காலை 11:00 முதல் 11:30 மணி வரை ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இந்தியில் உரையாற்றுவார். அது, 63 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, நாடு முழுவதும் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக பிரதமர் மோடியின் 100-வது 'மனதின் குரல்' நிகழ்ச்சி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஒலிபரப்பப்பட உள்ளது.

இந்த நிலையில், 'மனதின் குரல்' 100-வது நிகழ்ச்சி குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

"இன்று காலை 11 மணிக்கு தொடங்கும் 'மனதின் குரல்' நிகழ்ச்சியின் 100-வது தொகுப்பை கேட்க மக்கள் அனைவரும் தயாராக இருங்கள். இது உண்மையிலேயே சிறப்பான பயணமாக இருந்திருக்கிறது. இதில் இந்திய மக்களின் கூட்டு உணர்வை கொண்டாடி, எழுச்சியூட்டும் வாழ்க்கைப் பயணங்களைச் சிறப்பித்துள்ளோம்" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story