இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 743 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 743 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
x

கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

புதுடெல்லி,

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அத்துடன் ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 3 பேர், கர்நாடகத்தில் 2 பேர், தமிழ்நாடு மற்றும் சத்தீஷ்காரில் தலா ஒருவர் என மொத்தம் 7 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் தற்போது3,997 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story