பெங்களூருவில் இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை
பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
பெங்களூரு,
கர்நாடகாவில் கடந்தாண்டு, தென் மேற்கு பருவமழை, வட கிழக்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால், மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. ஆறு, அணை, ஏரி உட்பட நீர் நிலைகளில் தண்ணீர் வற்றியுள்ளது. ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் இல்லை. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது.
அத்துடன், கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் நல்ல மழை பெய்தது.
இந்த நிலையில், பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் இன்றும் கனமழை பெய்தது. அத்துடன், ஒருசில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. சிவாஜி நகர், மெஜஸ்டிக், விதானசவுதா, ஆனந்தராவ் சர்க்கில் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Related Tags :
Next Story