தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவு


தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்த  சென்னை ஐகோர்ட் உத்தரவு
x
தினத்தந்தி 23 May 2018 10:59 AM GMT (Updated: 23 May 2018 10:59 AM GMT)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு. #ThoothukudiShooting #SterliteProtest #sterlitekillsthoothukudi

சென்னை

மறு உத்தரவு வரும் வரை இறந்தவர்களின் உடற்கூறு செய்யப்பட்ட உடல்களை பதப்படுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

தூத்துக்குடி கலவரம் தொடர்பாக மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி விசாரிக்க உத்தரவிட கோரிய 3 வழக்கறிஞர்கள்  மனு செய்தனர் . அந்த  மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.

அப்போது வழக்கறிஞர் சங்கரசுப்பு வாதிடும் போது:-

தூத்துக்குடி சம்பவம் தற்செயலாக நடந்தது அல்ல, திட்டமிட்டு நடத்தப்பட்டது. 15 நாட்களுக்கு முன்பே போராட்டம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.  என கூறினார்.

அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர்  வாதாடினார்.

நீதிமன்றத்திற்கு வெளியே நடப்பது ஏதுவும் தெரியாமல் இங்கே உட்காந்திருக்கிறோம் என நினைக்க வேண்டாம்,நாங்கள் இங்கே உட்கார்ந்திருப்பதால் அனைவரையும் சட்டத்தின் பார்வையில்தான் பார்க்கிறோம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவ வழக்கில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞருக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

மறு உத்தரவு வரும் வரை இறந்தவர்களின் உடற்கூறு செய்யப்பட்ட உடல்களை பதப்படுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. பிரதேச பரிசோதனை வந்தவுடன் அதன் தன்மையை பொறுத்து உத்தரவிடப்படும் . 

Next Story