கஜா புயல் பாதிப்பிற்காக ரூ.1000 கோடி நிவாரணம் ஒதுக்கியதற்கான அரசாணை வெளியீடு
கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கு ரூ.1000 கோடி விடுவித்தது தொடர்பாக அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
சென்னை,
கஜா புயல் பாதிப்பு சீரமைப்பு பணிகளுக்கான ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு விவரம் அரசாணையாக வெளியிடப்பட்டு உள்ளது.
* புயலால் சேதம் அடைந்த வீடுகளுக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு
* விவசாய துறைக்கு ரூ.350 கோடி
* மின் வினியோக சீரமைப்பு பணிகளுக்கு முதல் கட்டமாக ரூ 200 கோடி ஒதுக்கீடு
* மீன் வளத்துறைக்கு ரூ. 41.63 கோடி ஒதுக்கீடு
* கால்நடைகள் உயிரிழப்புக்கு ரூ.205.87 கோடி ஒதுக்கீடு
* குடி நீர்,சாலை உள்கட்டமைப்பு பணிகளுக்கு ரூ. 102.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story