சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Nov 2018 3:52 PM GMT (Updated: 21 Nov 2018 3:52 PM GMT)

நேற்று இரவு முதல் மழை பெய்துவரும் நிலையில் சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


சென்னை,


வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறுவதால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் 2 நாட்களுக்கு பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வடமாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. கனமழை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை காற்றுடன் மிதமாக பெய்து வருகிறது. இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில் சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

Next Story