கஜா புயல்; டி.என்.பி.எஸ்.சி.யில் அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


கஜா புயல்; டி.என்.பி.எஸ்.சி.யில் அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
x
தினத்தந்தி 29 Nov 2018 12:28 PM GMT (Updated: 29 Nov 2018 12:28 PM GMT)

கஜா புயல் பாதிப்பினை அடுத்து டி.என்.பி.எஸ்.சி.யில் அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 16ந்தேதி டெல்டா பகுதியில் உள்ள 12 மாவட்டங்களில் கஜா புயல் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது.  இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்கள் கடும் பாதிப்படைந்தன.

கஜா புயலின் தாக்குதலால் பல லட்சம் தென்னை, பலா மற்றும் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன.  வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும் நாசமானது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் மின்மாற்றிகள், துணை மின் நிலையங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டது.

ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.  இதனை தொடர்ந்து நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இதற்காக மத்திய அரசிடம் ரூ.15 ஆயிரம் கோடி தமிழக அரசு சார்பில் நிதியுதவி கேட்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கஜா புயல் பாதிப்பினை அடுத்து தேர்வுக்கு விண்ணப்பம் செய்வோரின் வசதிக்காக டி.என்.பி.எஸ்.சி.யில் அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க டிசம்பர் 10ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று தேர்வுக்கான கட்டணம் செலுத்த டிசம்பர் 12ந்தேதி வரையும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Next Story