எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட மதுரை வந்தார் பிரதமர் மோடி


எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட மதுரை வந்தார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 27 Jan 2019 6:11 AM GMT (Updated: 27 Jan 2019 6:11 AM GMT)

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வருகை தந்துள்ளார்.

மதுரை,

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. ரூ.1,264 கோடியில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கை வசதி, 100 எம்.பி.பி.எஸ். கல்வி இடங்கள் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

இந்த மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா, மதுரை மண்டேலா நகரில் இன்று நடைபெறுகிறது.  இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார்.  இதற்காக அவர் விமானம் வழியே மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்து உள்ளார்.

அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.  பிரதமர் மோடியின் வருகையை தொடர்ந்து ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Next Story