ஆட்சி, எடப்பாடியின் கையிலா? மணல் கொள்ளையர்கள் கையிலா? - மு.க.ஸ்டாலின் கண்டனம்
ஆட்சி, எடப்பாடியின் கையிலா? மணல் கொள்ளையர்கள் கையிலா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சென்னை,
மணல் கொள்ளையர்கள் முதலமைச்சரின் பெயரைப் பயன்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது,
''இது எடப்பாடி பழனிசாமியின் லாரி என மிரட்டும் அளவுக்கு, சமூக விரோதிகள் நடமாட்டத்துக்கு முதலமைச்சர் பெயரைப் பயன்படுத்துவது போன்ற அராஜகம் வேறு என்ன இருக்க முடியும்?
ஆட்சி, எடப்பாடியின் கையிலா? மணல் கொள்ளையர்கள் கையிலா? தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது எடப்பாடி பழனிசாமியின் லாரி என மிரட்டும் அளவுக்கு, சமூக விரோதிகள் நடமாட்டத்துக்கு முதலமைச்சர் பெயரைப் பயன்படுத்துவது போன்ற அராஜகம் வேறு என்ன இருக்க முடியும்?
— M.K.Stalin (@mkstalin) September 30, 2019
ஆட்சி - எடப்பாடியின் கையிலா? மணல் கொள்ளையர்கள் கையிலா?
தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? குற்றத்தின் ஆட்சியா? https://t.co/taKPjZvhKI
Related Tags :
Next Story