கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை - பரிசோதனையில் உறுதி


கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை - பரிசோதனையில் உறுதி
x
தினத்தந்தி 29 March 2020 10:00 PM GMT (Updated: 29 March 2020 9:13 PM GMT)

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரத்யேக ‘வார்டில்’ வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை ‘வார்டில்’ அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை உட்பட 3 பேர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இதில் அந்த குழந்தைக்கு பிறவி எலும்பு நோய் உள்ளதும், 66 வயது ஆணுக்கு நீண்ட நாள் சிறுநீரக கோளாறு இருந்ததும், 24 வயது வாலிபருக்கு நிமோனியா பாதிப்பால் ரத்தத்தில் நச்சுத்தன்மை ஏற்பட்டு இருந்ததும் தெரியவந்தது.

உயிரிழந்த இந்த 3 பேரின் தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் முன்னதாகவே எடுக்கப்பட்டு கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தன. இந்த பரிசோதனை முடிவுகள் தற்போது கிடைத்துள்ளன.

இதுகுறித்து நேற்று சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 3 பேரின் தொண்டை மற்றும் ரத்த மாதிரிகளின் முடிவுகளில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story