தமிழகத்தில் இன்று 10,448 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


தமிழகத்தில் இன்று 10,448 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 16 Jun 2021 2:30 PM GMT (Updated: 16 Jun 2021 2:30 PM GMT)

தமிழகம் முழுவதும் தற்போது 1,14,335 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று 1,64,066 மாதிரிகளை பரிசோதனை செய்ததில் புதிதாக 10,448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,88,746 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 270 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,655 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 21,058 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,44,073-ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 1,14,335 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story