ஏழை, எளிய, நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத நிதிநிலை அறிக்கை - ஒ.பன்னீர்செல்வம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 19 Aug 2021 11:27 AM GMT (Updated: 19 Aug 2021 11:27 AM GMT)

தமிழக அரசின் பட்ஜெட்டில் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

வெள்ளை அறிக்கையின் முக்கிய பிரச்சினைகளுக்கு நாடாளுமன்றத்தில் விரைந்து தீர்வு காண திமுக முயற்சிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் பட்ஜெட்டில் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை. வெள்ளை அறிக்கை வெளியிட்டு அதிமுகவை குறை கூறுவதை விடுத்து, ஆக்கப்பூர்வ பணிகளில் திமுக அரசு ஈடுபட வேண்டும். வெள்ளை அறிக்கையின் முக்கிய பிரச்சினைகளுக்கு நாடாளுமன்றத்தில் விரைந்து தீர்வு காண திமுக முயற்சிக்க வேண்டும். திமுகவின் பல அறிவிப்புகள் நிறைவேற்ற சாத்தியமில்லை என்பதுதான் உண்மை. உண்மைகு மாறான தோற்றத்தை மக்கள் மனதில் பதிய வைக்கும் முயற்சியாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சாமானிய மக்களை யார் வேண்டுமானாலும் ஏய்து விடமுடியும் என்று நினைத்து விடாதீர்கள். வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்துள்ளதால் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்பதுதான் கோரிக்கை. கடினமான பொருளாதார சூழலில் மக்களின் தலையில் சுமையை ஏற்றாமல் அதிமுக அரசு செயல்பட்டது” என்று ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Next Story