நடந்து சென்ற தொழிலாளி தவறி விழுந்து சாவு


நடந்து சென்ற தொழிலாளி தவறி விழுந்து சாவு
x

நடந்து சென்ற தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தார்.

பெரம்பலூர்

பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் உலகநாதன் (வயது 44). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வீட்டிற்கு நடந்து செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். இதனை கண்டவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உலகநாதன், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story