பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம்


பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம்
x

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

ஈரோடு

அம்மாபேட்டை

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம்போனது.

பருத்தி ஏலம்

அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு அந்தியூர், பவானி, சித்தார், அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிகள், சேலம் மாவட்டம் கொங்கணாபுரம், தேவூர், கோனேரிப்பட்டி எடப்பாடி, மேட்டூர், கொளத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 7 ஆயிரத்து 784 மூட்டைகளில் பி.டி.ரக பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ஏலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் முன்னிலையில் நடந்தது.

ரூ.2 கோடி

பருத்தி குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 329-க்கும், அதிபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 697-க்கும் என மொத்தம் ரூ.1 கோடியே 91 லட்சத்து 18 ஆயிரத்து 565-க்கு ஏலம் போனது.

பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, அன்னூர், கோவை, கொங்கணாபுரம், அந்தியூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து பருத்தியை வாங்கி சென்றனர்.


Related Tags :
Next Story