லாரி மீது கார் மோதல்; பெண் பலி


லாரி மீது கார் மோதல்; பெண் பலி
x

வேப்பூர் அருகே லாாி மீது கார் மோதியதில் பெண் பலியானாா்.

கடலூர்

ராமநத்தம்,

சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 72). இவருடைய மனைவி மீனாட்சி (60) மற்றும் சேவகன் (52) சண்முகம் (44). இவர்கள் 4 பேரும் காரில் புதுக்கோட்டை மாவட்டம் நெய்குப்பை கிராமத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர் திரும்பினர். வேப்பூர் அடுத்த ஐவதுகுடி தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, எதிர்பாராதவிதமாக அவர்களது கார் முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு மீனாட்சியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து தியாகராஜன், சேவகன், சண்முகம் ஆகியோருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே மீனாட்சியின் உடலை வேப்பூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story