போதைப்பொருட்களுக்கு தடை விதிக்க கோரி பா.ம.க. கண்டன ஆர்ப்பாட்டம்


போதைப்பொருட்களுக்கு தடை விதிக்க கோரி பா.ம.க. கண்டன ஆர்ப்பாட்டம்
x

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே போதைப்பொருட்களுக்கு தடை விதிக்க கோரி பா.ம.க. கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சுங்கசாவடி பகுதியில் நேற்று பா.ம.க. சார்பில் தமிழ்நாட்டில் குட்கா, கஞ்சா, அபின் உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலும் தடை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் தினேஷ் குமார் தலைமை தாங்கினார். சமூக முன்னேற்ற பேரவை தலைவர் செல்வம், மாவட்ட தலைவர் விஜயன், கிழக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கேசவன், கணேசன், மாவட்டத் துணைச் செயலாளர் செஞ்சி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் வ.பாலா என்கின்ற பாலயோகி, மாநில அமைப்பு துணை-செயலாளர் நா.வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். முடிவில் நகர செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.


Next Story