மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி


மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி
x

பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியானார்.

திருவள்ளூர்

பொன்னேரி அருகே பெரவள்ளுர் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் சங்கரன் (வயது 65). விவசாயி. இவர் சின்னகாவனம் கிராமத்தில் உள்ள தனது விவசாய நிலத்தை பார்வையிட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் கோளாறு ஏற்பட்டு உள்ளது.

இதனால் மூகாம்பிகை நகரில் உள்ள மெக்கானிக் கடையில் மோட்டார் சைக்கிளை பழுது பார்க்க கொடுத்துவிட்டு அருகில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அதிவேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் விவசாயி மீது மோதியது. படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story