இரண்டாவது தர்மயுத்தம்...! அவரின் பெயரை உச்சரிக்க கூட நான் விரும்பவில்லை.. எடப்பாடி குறித்து ஓபிஎஸ் ஆவேசம்


இரண்டாவது தர்மயுத்தம்...! அவரின் பெயரை உச்சரிக்க கூட நான் விரும்பவில்லை.. எடப்பாடி குறித்து ஓபிஎஸ் ஆவேசம்
x

அதிமுக சட்டவிதியை எந்தளவுக்கு சிதைக்க வேண்டுமோ அந்த அளவுக்கு சிதைத்துள்ளனர் என ஓ.பன்னீர் செல்வம் கூறி உள்ளார்.

சென்னை:

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் முன்னான் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. ஓ.பி.எஸ். அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் 87 மாவட்ட செயலாளர்கள், 176 ஆதரவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டபிறகே கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசும் போது கூறியதாவது;-

அதிமுகவின் இந்த நிலைக்கு யார் காரணம் என்று உங்களுக்கு தெரியும்; அவரது பெயரை நான் உச்சரிக்க மாட்டேன்.தன் இரும்பு பிடிக்குள் கட்சியை வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் நடத்திய நாடகம் தோல்வியில் முடிந்தது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய சட்ட விதியை காப்பாற்ற இரண்டாவது தர்மயுத்தம் துவங்கியுள்ளது.எதற்கும் அஞ்சாமல் துணிந்து நில்லுங்கள்.முன்வரிசையில் நாங்கள் நின்று, எதிர்வரும் கணைகளை தாங்கி உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்போம்.

"வேட்புமனுவை வாபஸ் பெற்று இரட்டை இலை வெற்றி பெற ஆதரவாக இருப்போம் என சொன்னோம். ஆனால் அவர்கள் ஏற்கவில்லை"

மக்கள் தீர்ப்பு எனும் மகேசன் தீர்ப்பு இருக்கிறது, அது கூடிய விரைவில் வரும்;வாக்கு எண்ணிக்கையின் போது அது தெரியவரும்.

அதிமுக சட்டவிதியை எந்தளவுக்கு சிதைக்க வேண்டுமோ அந்த அளவுக்கு சிதைத்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளரை மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்ய முடியாது என கூறினார்.


Next Story