ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் நகை கொள்ளை


ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் நகை கொள்ளை
x

ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் நகை கொள்ளையடித்து சென்றனர்.

விருதுநகர்

சிவகாசி,

சாத்தூர் சிதம்பரம் நகரை சேர்ந்தவர் பிரகலாதன் (வயது 65). இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக மதுரை சென்றுள்ளார். அப்போது மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த தங்கம், வெள்ளி பொருட்கள், பித்தளை பானை, உண்டியல், 10 பட்டு சேலைகள் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.இதுகுறித்து பிரகலாதன் சாத்தூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story