கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடியது


கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடியது
x

கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததால் கடற்கரை வெறிச்சோடியது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததால் கடற்கரை வெறிச்சோடியது.

சுற்றுலா தலம்

சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக கன்னியாகுமரி பகுதியில் காலையில் சுட்டெரிக்கும் வெயிலும், மதியத்திற்கு மேல் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. அத்துடன் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக உள்ளது. குறிப்பாக வட இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்படுகிறது. இதனால், கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் சன்னதி தெரு, காந்தி மண்டபம் சாலை, முக்கடல் சங்கம கடற்கரை ஆகியவை வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததால் கடைகளிலும் வியாபாரம் இன்றி காணப்பட்டது.

நேற்று மாலையில் கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.

படகு ேபாக்குவரத்து தாமதம்

கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் படகில் ெசன்றுபார்வையிடுவார்கள். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களாக நீர்மட்டம் தாழ்வு காரணமாக படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது. நேற்று 4-வது நாளாக காலையில் கடலில் நீர்மட்டம் தாழ்வு ஏற்பட்டது. இதனால், படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு தொடங்கியது.


Next Story