பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி பலி


பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி பலி
x

ஆலங்குடி அருகே பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி பலியானார்.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே உள்ள கூழையன்காட்டை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 42), கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை அரையப்பட்டி இடுகாடு பகுதியில் மரம் வெட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் ஆலங்குடி மருத்துவமனைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அண்ணா நகரில் சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இதில், படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி சப்-இன்ஸ்பெக்டர் நதியா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story