மாடியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் சாவு


மாடியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் சாவு
x

மாடியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் உயிரிழந்தான்.

திருச்சி

லால்குடி:

லால்குடியை அடுத்த திருமங்கலம் கிராமத்தில் உள்ள மாதா கோவில் தெருவை சேர்ந்த தாமசின் மகன் வில்சன்(வயது 9). இவன் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை வீட்டின் மாடியில் விளையாடியபோது வில்சன் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள், வில்சனை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வில்சன், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story