விளையாட்டு வீரர்கள் மாத ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்


விளையாட்டு வீரர்கள் மாத ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்
x

சர்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்கள் மாத ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க அடுத்த மாதம் 19-ந்தேதி கடைசி நாளாகும்.

கரூர்

மாத ஓய்வூதியம்

விளையாட்டுத்துறையில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளை பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள தமிழகத்தை சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதள முகவரி (www.sdat.tn.gov.in) மூலம் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க குறைந்தபட்ச தகுதிகளான தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.

சர்வதேச, தேசிய போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாம் இடங்களில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். தகுதியான விளையாட்டு போட்டிகள் மத்திய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

31.1.2023-ந்தேதி 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பதாரர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6000-ல் இருந்து ரூ.15,000-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம், மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.

முதியோர்களுக்கான விளையாட்டு போட்டிகள் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. எனவே கரூர் மாவட்ட விளையாட்டு வீரர்கள் இந்த தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை இணையதள முகவரியில் (www.sdat.tn.gov.in) விண்ணப்பித்து பயனடையலாம். ஏப்ரல் மாதம் 19-ந்தேதி இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாளாகும், என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story