மாநில அளவிலான சிலம்ப போட்டி


மாநில அளவிலான சிலம்ப போட்டி
x

மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது.

திருச்சி

மாநில அளவிலான ஓபன் சிலம்ப போட்டி திருச்சி, உறையூரில் உள்ள ஒரு பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் திருச்சி, கடலூர், திருப்பூர், சென்னை, தஞ்சை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

போட்டிகளை சிலம்ப ஆசான் குமரேசன் தொடங்கி வைத்தார். தனித்திறன் அடிப்படையில் போட்டிகள் நடந்தன. போட்டிகளின் முடிவில் அதிக பதக்கங்களை வென்று திருச்சி, பொன்மலை அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. 2-வது இடத்தை திருவள்ளூர் மாவட்ட அணி பெற்றது. வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.


Next Story