'தமிழ்நாடு பாதுகாப்பான, அமைதியான மாநிலம்' - குஜராத் மந்திரி ருஷிகேஷ் பாய் பட்டேல் புகழாரம்


தமிழ்நாடு பாதுகாப்பான, அமைதியான மாநிலம் - குஜராத் மந்திரி ருஷிகேஷ் பாய் பட்டேல் புகழாரம்
x

தமிழ்நாடு அனைத்து மொழி பேசும் மக்களும் வாழ பாதுகாப்பான, அமைதியான மாநிலம் என குஜராத் மந்திரி ருஷிகேஷ் பாய் பட்டேல் தெரிவித்தார்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் விழா நடைபெற்றது. இதில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மந்திரி ருஷிகேஷ் பாய் பட்டேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்து மொழி பேசும் மக்களும் வாழ பாதுகாப்பான, அமைதியான மாநிலம் எனவும், இங்குள்ளவர்கள் நட்பை பேணுவதிலும், வரவேற்பு அளிப்பதிலும் சிறந்தவர்கள் எனவும் தெரிவித்தார்.




Next Story