ரெயில் மோதி தொழிலாளி பலி


ரெயில் மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 16 Jun 2023 6:45 PM GMT (Updated: 17 Jun 2023 6:01 AM GMT)

பெண்ணாடத்தில் ரெயில் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கடலூர்

பெண்ணாடம்,

பெண்ணாடம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 45), தொழிலாளி. இவர் நேற்று பெண்ணாடம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தமிழரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story