சீனாவில் நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு


சீனாவில் நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
x
தினத்தந்தி 24 July 2019 7:48 AM GMT (Updated: 24 July 2019 7:48 AM GMT)

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

கையாங்,

சீனாவின் தென்மேற்கே லையூபன்சூய் நகரில் உள்ள கிராமம் ஒன்றில் நேற்றிரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.  இதில் 21 வீடுகள் மண்ணில் புதைந்து போயின.  இந்த பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர்.

இதனை தொடர்ந்து மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது.  இதில் இன்று காலை வரை 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.  34 பேரை இன்னும் காணவில்லை.  உள்ளூர் அரசு நிர்வாகத்துடன் இணைந்து அவசரகால மேலாண் அமைச்சகத்தின் அதிகாரிகளும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story