கென்யாவில் கரிஷா பகுதியில் போலீஸ் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 3 பேர் பலி


கென்யாவில் கரிஷா பகுதியில் போலீஸ் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 3 பேர் பலி
x
தினத்தந்தி 13 Jan 2020 9:09 PM GMT (Updated: 13 Jan 2020 9:09 PM GMT)

கென்யாவில் கரிஷா பகுதியில் போலீஸ் முகாம் மீது அல்-சபாப் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.


* நைஜர் நாட்டில் கடந்த 9-ந் தேதி ராணுவ முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான வீரர்களின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்தது. பதில் தாக்குதலில் 77 பயங்கரவாதிகள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக அந்த நாட்டு அரசு நேற்று அறிவித்தது. ராணுவ வீரர்கள் இறப்பையொட்டி அங்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

* பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கடும் பனிப்பொழிவுக்கு இடையே மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக அங்குள்ள கில்லி லுக்மன் பகுதியில் நடந்த நிச்சயதார்த்த விழாவின்போது, கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகினர். இதுபோக அந்த மாகாணத்தில் 8 பேர் குளிர் மற்றும் மழையால் உயிரிழந்தனர்.

* கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கரிஷா பகுதியில் போலீஸ் முகாம் மீது அல்-சபாப் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 3 பேர் பலியானதாகவும், பெண் செவிலியர் ஒருவரை பயங்கரவாதிகள் கடத்தி சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Next Story