சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலி எண்ணிக்கை 2,715 ஆக அதிகரிப்பு


சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலி எண்ணிக்கை 2,715  ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 26 Feb 2020 8:24 AM GMT (Updated: 26 Feb 2020 8:24 AM GMT)

கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பெய்ஜிங்,

சீனாவில் கடந்த டிசம்பர் இறுதியில் இருந்து பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உயிர்ப்பலி வாங்கி வருகிறது.  சீனா மட்டும் அல்லாது உலக நாடுகளையும் பீதிக்குள்ளாக்கிய கொரானோ வைரஸ் தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. 

 கோவிட்-19 என பெயரிடப்பட்ட இந்த வைரசினால் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், இறப்போரின் எண்ணிக்கையும் பல மடங்காக அதிகரித்துக் கொண்டே வந்தது. நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது, கொரோனாவின் வீரியம் குறையத் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி பலியானோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது. எனினும் பலி எண்ணிக்கை அச்சப்படும் அளவிலேயே காணப்படுகிறது

சீனாவில், கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 52 உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் சீனாவில் பலி எண்ணிக்கை 2,715 ஆக அதிகரித்துள்ளது. 78,064 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  புதிதாக 406 - பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சீன தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது. 

Next Story