ஜி-7 நாடுகள் மாநாட்டை காணொலி மூலம் நடத்த முடிவு
![ஜி-7 நாடுகள் மாநாட்டை காணொலி மூலம் நடத்த முடிவு ஜி-7 நாடுகள் மாநாட்டை காணொலி மூலம் நடத்த முடிவு](https://img.dailythanthi.com/Articles/2020/Mar/202003210447043257_G7-Nations-conference-to-be-held-by-video_SECVPF.gif)
ஜி-7 நாடுகள் மாநாட்டை காணொலி மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் கேம்ப் டேவிட் பகுதியில், ஜூன் 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை ஜி-7 நாடுகள் உச்சி மாநாடு நடைபெற இருந்தது. அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து ஆகிய 7 நாடுகள், அதில் உறுப்பினர்களாக உள்ளன.
இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்த மாநாட்டை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ரத்து செய்துள்ளார். அதற்கு பதிலாக, ஜி-7 நாடுகளின் தலைவர்களுடன் ஏப்ரல், மே மாதங்களில் காணொலி காட்சி மூலம் உரையாட அவர் முடிவு செய்துள்ளார்.
இத்தகவலை வெள்ளை மாளிகை துணை செய்தி தொடர்பாளர் ஜுட் டீரே தெரிவித்தார்.
அமெரிக்காவில் கேம்ப் டேவிட் பகுதியில், ஜூன் 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை ஜி-7 நாடுகள் உச்சி மாநாடு நடைபெற இருந்தது. அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து ஆகிய 7 நாடுகள், அதில் உறுப்பினர்களாக உள்ளன.
இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்த மாநாட்டை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ரத்து செய்துள்ளார். அதற்கு பதிலாக, ஜி-7 நாடுகளின் தலைவர்களுடன் ஏப்ரல், மே மாதங்களில் காணொலி காட்சி மூலம் உரையாட அவர் முடிவு செய்துள்ளார்.
இத்தகவலை வெள்ளை மாளிகை துணை செய்தி தொடர்பாளர் ஜுட் டீரே தெரிவித்தார்.
Related Tags :
Next Story