ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.51 லட்சத்தை கடந்தது
ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1.51 லட்சத்தை கடந்துள்ளது.
தெஹ்ரான்,
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 62,29,776 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3,72,888 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் ஈரான் நாட்டிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது.
இந்நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஈரானில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1,51,466 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 63 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 7,797 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 1,18,848 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ஈரான் 12-வது இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் (18,29,273 பேர்), இரண்டாம் இடத்தில் பிரேசிலும் (5,05,487 பேர்), மூன்றாவது இடத்தில் ரஷ்யாவும் (4,05,843 பேர்) உள்ளன.
Related Tags :
Next Story