பிரேசில் நாட்டில் புதிதாக 43,520 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 950 பேர் பலி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 30 May 2021 11:43 PM GMT (Updated: 31 May 2021 2:12 AM GMT)

பிரேசிலில் உருமாறிய கொரோனா பரவி வருவதால் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

பிரேசிலியா,

தென்அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக பிரேசில் உள்ளது. மேலும் உலக அளவில் கொரோனா உயிரிழப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்திலும், கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து 3-வது இடத்திலும் பிரேசில் உள்ளது. 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பிரேசிலில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு வைரஸ் தொற்று மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 43,520 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்னிக்கை 1 கோடியே 65 லட்சத்து 15 ஆயிரத்து 120 ஆக அதிகரித்துள்ளது. 

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 950 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 62 ஆயிரத்து 092 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1,49,12,744 பேர் குணமடைந்துள்ளனர், தற்போது 11,40,284 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Next Story